Monday 6 June 2016

திருக்குருகூர் (ஆழ்வார்திருநகரி) ஆலயம் சென்றால் நாகதோஷங்கள் நீங்கும்




திருப்பதிசாரம் என்ற ஊரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவாழ்மார்பன் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் அருகில் உடையநங்கை என்ற விஷ்ணு பக்தை வாழ்ந்து வந்தாள். இதே போல் திருநெல்வேலி அருகில் உள்ள ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) என்ற ஊரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஆதிநாதர் கோவிலுக்கு அருகில் காரி என்ற விஷ்ணு பக்தன் வசித்து வந்தான். காரிக்கும் உடைய நங்கைக்கும் திருமணம் நடைபெற்றது.
நம்மாழ்வார் அவதாரம் – திருப்பதிசாரத்தில் மகாவிஷ்ணு அருளால் அந்தத் தம்பதிக்கு நம்மாழ்வார் அவதரித்தார். பிறந்தவுடன் அழாமல் தாய் அமுது உண்ணாமல் மவுனத்தோடு இருந்தார் நம்மாழ்வார். கொஞ்சம் பயந்து போன அவரது பெற்றோர் திருக்குருகூரில் உள்ள ஆதிப்பிரான் சன்னிதியில் நம்மாழ்வாரை விட்டனர். அந்தக் குழந்தை தவழ்ந்து சென்று அங்கிருந்து புளியமரப் பொந்தில் புகுந்து யோக முத்திரையுடன் பத்மாசன யோகத்தில் அமர்ந்து விட்டது. தொடர்ச்சியாக பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் தல மரமான புளிய மரத்திலேயே நம்மாழ்வார் தவ நிலையில் இருந்தார். பின்பு வேதத்தின் சாரத்தை திருவாய் மொழியாக மொழிய அதனை திருக்கோளூரில் ஆழ்வார் நவ திருப்பதியில் பிறந்த மதுரகவியாழ்வார் ஏட்டில் எழுதினார்.
திவ்ய தேச பெருமாள்கள் – பல திவ்ய தேச தலங்களிலும் எழுந்தருளியுள்ள எம்பெருமாள்கள் திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரில் உள்ள ஆதிநாத சுவாமி ஆலய புளியமரத்தின் இலைகளிலும் கிளைகளிலும் வீற்றிருப்பதாக ஐதீகம். அவ்வாறு இருக்கும் பெருமாள்கள் நம்மாழ்வாரிடம் எம்மைப் பாடுக! எம்மைப் பாடுக! என்று கேட்டதாக கூறப்படுகிறது. நம்மாழ்வாரும் எந்த திவ்ய தேசத்திற்கும் நேரில் செல்லாது புளியமரத்தின் பொந்தில் இருந்து கொண்டே திவ்ய தேச ஸ்தலங்களுக்கு பாசுரம் பாடி அருளினார். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை தொகுதி நாதமுனிகளுக்கு நம்மாழ்வாரே பிரத்யட்சமாகி நாலாயிரம் பாக்களையும் அருள நாதமுனிகள் அவற்றை ஏட்டில் எழுதித் தொகுத்தார் என்பார்கள். கம்பர் ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றும்போது சடகோபனைப் (சடகோபன்- நம்மாழ்வார்) பாடினாயோ? என்று கேட்டாராம் பெருமாள். கம்பர் உடனடியாக நம்மாழ்வாரைப் போற்றி சடகோபரந்தாதி பாடினார்.
பெரிய விமானம் – இத்தல புளியமரத்தில் பெருமாள் பிரம்மச்சரிய யோகத்தில் இருப்பதால் மகாலட்சுமியை மகிழ மாலையாக ஏற்றுக்கொண்டாராம் மகாவிஷ்ணு. ஆழ்வார் திருநகரிக்கு வந்த ராமானுஜர் இதுவோ திருநகரி ஈதோ பொருநை இதுவோ பரம பதத்து எல்லை என்கிறார். ஆம்! ஆழ்வார் திருநகரியை பரமபதத்து எல்லை என்கிறார் ராமானுஜர். இத்தலத்தில் நம்மாழ்வார் சன்னிதியும் மூலவர் ஆதிநாதன் சன்னிதியில் தனித்தனியே உள்ளன. ஆதிநாதவல்லி மற்றும் குருகூர்வல்லி என நாச்சியார்கள் இருவர் தனித்தனி சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக் கிறார்கள். மணவாள மாமுனிகள் மற்றும் நம்மாழ்வாரின் மங்களாசாசனம் பெற்ற திருத்தலம் இது. மூலவரின் முன்புறமுள்ள கருட மண்டபத்தை மணவாள மாமுனிகளே கட்டினாராம். மூலவரின் கருவறை விமானத்தை விட நம்மாழ்வார் சன்னிதியின் விமானம் பெரியதாக அமைந்துள்ளது. அடியவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டவர் அல்லவா? ஆதிநாதப் பெருமாள். இங்குள்ள நம்மாழ்வாரின் விக்கிரகம் தாமிரபரணி தண்ணீரைக் காய்ச்சி அதில் ஆழ்வாரால் அவரது சக்தி பிரயோகிக்கப்பட்டு உருவானது என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் உள்ள மோகன வீணை என்னும் கல் நாதஸ்வரம் உலக அதிசயங்களுக்கு ஒப்பானது.
நின்ற கோலத்தில் – மூலவரான ஆதிநாதப் பெருமாள் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இவர் சுயம்புவாக தோன்றியவர். அவரின் பெரிய திருமேனியுடைய திருப்பாதங்கள் பூமிக்குள் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் அரங்கனுக்கு நடைபெறும் அரையர் சேவை இத்தல ஆதிநாதப் பெருமாளுக்கும் உண்டு. இத்தல தெற்கு மாடத் தெருவில் திருப்பதி ஏழுமலையானும் ஸ்ரீரங்கம் அரங்கநாதனும் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளனர். வடக்கு மாடத் தெருவில் ஆண்டாளுக்கும் தேசிகனுக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. காசிப முனிவரின் சாபத்தால் இழந்த தனது செல்வத்தை இந்திரன் இத்தல ஆதிநாதப் பெருமாளை வழிபட்டு மீண்டும் பெற்றான். பிரம்மாவுக்கு குருவாக இருந்து இத்தல ஆதிநாத பெருமாள் உபதேசம் செய்த காரணத்தால் இத்தலம் குருகூர் என்று அழைக்கப் படுவதாக கூறப்படுகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குரு பார்வை ஜாதகத்தில் வேண்டுவோர் இத்தல ஆதிநாதரை வழிபட்டால் நலம் உண்டாகும். ராமர், வேணுகோபாலன், நரசிம்மர், கருடன் மற்றும் ராமானுஜர் சன்னிதிகள் ஆலயத்தில் உள்ளன. குருகு என்ற பதத்திற்கு தமிழில் சங்கு என்று பொருள் கொள்ளலாம். இத்தல பெருமாள் சங்கன் என்னும் கடலில் வாழும் சங்குகளின் அரசன் வந்து வழிபட்ட பேறு பெற்றதால் குருகூர் என்று பெயர் வந்ததாகவும் ஒரு கூற்று நிலவுகிறது. நம்மாழ்வார் அவதாரத்திற்கு பிறகு இந்த ஊர் ஆழ்வார் திருநகரி என்றானது.
திருவிழா – இத்தலத்தில் கருட சேவை வைகாசி மாதத்தில் நடைபெறுகிறது. விஷக்கடியால் அவதிப்படுவோர் இங்குள்ள கருடாழ்வாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட விஷக்கடிகள் அகலும் தோல் நோய்களும் நீங்கும். இத்தலத்தில் யானையும் வேடனும் போரிட்டு மடிய இத்தலத்தில் இறந்த ஒரே காரணத்திற்காக இருவரும் வைகுண்டம் சென்றனர். இவ்வாலயத்தில் வழிபட்டால் எமவாதனை இல்லை. பாவங்கள் பறந்தோடும். இங்கு வழிபட்டால் வைகுண்ட பதவி நிச்சயம். மேலும் இறந்து போன நம் முன்னோர்களுக்கு அமாவாசை நாள் மட்டுமின்றி இத்தலத்தில் எந்நாளும் திதி கொடுக்கலாம். அவ்வாறு செய்தால் நமது முன்னோர்களின் ஆன்மா நரகம் சென்றிருந்தாலும் நாம் இத்தலத்தில் திதி கொடுத்ததன் பலனாக விஷ்ணு தூதர்கள் அவர்களை வைகுண்டம் அழைத்துச் செல்வார்கள். திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி மற்றும் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் தென்கிழக்காக 30 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.

Thursday 26 May 2016


நாதமுனிகள் - ஆழ்வார்திருநகரி







நாதமுனிகள் கிபி 824 ம் வருடத்தில் கடலூர் மாவட்டத்தில் வீரநாராயணபுரம்என்னும் இன்றைய காட்டுமன்னார்கோயில் பகுதியில் சோபக்ருத ஆண்டு ;ஆனி மாதம்அனுச நட்சத்திரத்தில் திருவரங்கநாதன் என்னும் இயற்பெயருடன்பிறந்தவர்.
நாதமுனிகள் யோகவித்தைதேவ கான இசை ஆகியவற்றில் சிறந்துவிளங்கியதால் இவரை திருவரங்கநாதமுனிகள் என்று அழைத்தனர்அதுவேபிற்காலத்தில் மருவி நாதமுனிகள் ஆயிற்று..

காட்டு மன்னார் கோயில் எனும் தலத்தில் நாதமுனிகள் இருந்த போது வைணவஅடியார்கள் சிலர் கோயில்பெருமாளான மன்னனாரைச் சேவிக்க வந்தனர்.அப்போது அவர்கள் நம்மாழ்வாரின் ஆராஅமுதே அடியேன் உடலம் எனும்திருக்குடந்தை பாசுரத்தைப் பாடி சேவித்தனர்அதன் இறுதியில் குருகூர்ச்சடகோபன்குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும் என்றஅடிகளைக் கேட்ட நாதமுனிகள் அடியார்களிடம் ,”அந்த ஆயிரம் பாடல்கள்பற்றி சொல்ல இயலுமா?”என ஆர்வமாகக் கேட்டார்.
அவர்கள் அந்த பத்துப் பாசுரங்கள் மட்டுமே தமக்குத் தெரியும் என்றும் ஆயிரம்பாசுரங்களும் குருகூரில் மதுரகவிகள் வழி வந்த பராங்குச தாசரிடம் மற்றவிவரங்கள் தெரிய வரலாம் என்றும் கூறினர்
.நாதமுனிகளும் குருகூருக்குச் சென்று பராங்குச தாசரிடம் விசாரித்தார்.

 அவர் ”தற்சமயம் மதுரகவிகள் அருளிய ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ எனும்பத்துப் பாசுரங்கள் மட்டுமே உள்ளனமற்றைய ஆழ்வார் பாசுரங்கள் அழிந்துபோயின” என்று கூறினார்மேலும் கண்ணிநுண் சிறுத்தாம்பு பத்துப்பாசுரங்களை 12,000 முறை ஓதினால் நம்மாழ்வார் தோன்றி அருள்வார் என்றும்வழி கூறினார்.
நாதமுனிகள் திருப்புளியடியில் ஆழ்வார் சந்நிதியில் அமர்ந்து 12,000 முறைகண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாசுரங்களை ஓதினார்.அகம் மகிழ்ந்த நம்மாழ்வார்அவர் முன் தோன்றி தாம் பாடிய பாடல்களையும் ஆழ்வார் பிறர் பாடியபாடல்களையும் அவருக்கு அருளினார்நாலாயிரமும் நம்மாழ்வார் தந்ததுதான்!

பிரபந்தத்தின் பாடல்களுடன், அவற்றின் பொருளையும், அஷ்டாங்க யோக இரகசியங்களையும் அருளினார்.

கலியுகத்தில் ரிஷியாக இருந்த நாதமுனி,அவருக்கு மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகள் முன்பாக பரமபதம் அடைந்த நம்மாழ்வார் என்னும் பரம ரிஷியை வரவழைத்து உபதேசம் பெற்று நாலாயிரதிவ்யபிரபந்தம் என்னும் தமிழ்பொக்கிஷத்தை பெற்றுக்கொண்டாரெனில் நமது சித்தாந்தம் தான் எத்தனை உத்தமமானது பாருங்கள்! போட்டி பித்தலாட்டம் இல்லாத தூய்மையான சித்தாந்தம் கொண்டது அல்லவாநம் மதம்!

  

    ஆயிரம் பாடல்களைத் தேடிவந்த இவருக்கு மற்ற ஆழ்வார்கள் ‌அனைவரும்பாடிய பாடல்களும் கிடைத்ததுஇப்பாடல்களை திவ்யப்பிரபந்தமாக நாதமுனிகள் தொகுத்து முறைப்படுத்தி மேலையகத்தாழ்வார்,கீழையகத்தாழ்வார் என்ற இரு அக்காள் மகன்களை (மருமக்களை)திருவாய்மொழி திவ்யப் பிரபந்தப் பிரச்சாரத்தில் நாதமுனிகள் ஈடுபடுத்தினார்.இவர்களிருவரும் தேவகான இசைப்படி திவ்யப் பிரபந்தங்களை இறைவன் முன்பாடி அபிநயித்து மக்களிடம் அவற்றைப் பொருளுடன் பரப்பி வந்தனர்திருகுடந்தைதிவ்ய தேசத்திலிருந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் உலகிற்கு கிடைக்கும் வழியை நாதமுனிகள் பெற்றார்.


   பின்னர் ,மணவாள மாமுனிகள்நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின்திவ்யப் பிரபந்தத்தோடுஇராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிரதிவ்வியப் பிரபந்தம் என அருளினார்.


தான் பெற்ற புதையலை அனைவரும் அறியச் செய்தார்பிரபந்த பாடல்களைஇனிய இராகம்தாளம் அமைத்தும்அதற்கேற்ற அபிநயம் பிடித்தும் இறைவன்முன் ஆடினார்..


ஸ்வாமி தேசிகன் ஸ்ரீநாதமுனிகளை “தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசைதந்த வள்ளல்” என்று போற்றுகின்றார்ஸ்ரீநாதமுனிகள் இப்பிரபந்தங்களைப்பலவேறு திவ்யதேசங்களிலும் பூஜை காலங்களில் பாடுவது என்ற வழக்கத்தைஏற்படுத்தினார்.  வைணவத் திருத்தலங்களில் அரையர் சேவை எனப்படும்வழக்கத்திற்கு அடிகோலியவர் ஸ்ரீநாதமுனிகளே ஆவார்.

அரையர் சேவையை முதன்முதலில் தோற்றுவித்தவரும் இவரே! ஸ்ரீ வைணவ ஆச்சாரியப் பரம்பரையின் முதல் ஆச்சாரியரும் இவரே!



ஸ்ரீநாதமுனிகளின் பேரனும் குருபரம்பரையின் முக்கிய ஆசார்யனுமானஆளவந்தார்தமது ஸ்தோத்ர-ரத்னம் என்ற நூலின் தொடக்கத்தில் மூன்றுஸ்லோகங்களாலும் முடிவில் ஒரு ஸ்லோகத்தாலும் நாதமுனிகளைக்கொண்டாடுகின்றார்ஸ்வாமி தேசிகன்ஆளவந்தார் தமது ஸ்தோத்திரமானரத்னத்தை ஆசார்ய ஸ்துதி என்ற அழகிய பெட்டகத்தினுள் இட்டுள்ளார் என்றுவியக்கிறார்.  

ஆளவந்தார்,

நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே 
நாதாயமுநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே” 



என்று ஸ்ரீ நாதமுனிகளைக் கொண்டாடுகின்றார்


நாலாயிரம் பாசுரங்களை ராகத்துடனும் தாளத்துடனும் அபிநயத்துடனும் பாடியஇவர்களின் வழித்தோன்றல்களே “அரையர்கள்” என அழைக்கப்பட்டனர்.

என் பேரன் யமுனைத்துறைவன் (ஆளவந்தார்வருவான்அவனுக்கு யோகவித்தையை நீ உபதேசிக்க வேண்டும்” என்றும் உய்யக்கொண்டாரிடம் கூறீய நாதமுனிகள், அவரிடம் “ரகசியம் வெளியிடாதீர்” என்று கூறிஎன் அந்திமதசைக்குப் பிறகுபிறக்கப் போகும் என் பேரன் யமுனைத்துறைவனிடம்வேதாந்த சாரத்தையும்பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் ஒப்படைக்கவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

 ஆச்சாரி பரம்பரையில் நாதமுனிகளுக்குப் பின்னர் பெரும் புகழ்பெற்றவர்அவருடைய பேரனான யமுனைத்துறைவர்(யாமுனமுனிகள் என்ற ஆளவந்தார்தனக்கு நம்மாழ்வார் மூலமாகக் கிடைத்த உபதேசங்களைஎல்லாம் ஆளவந்தாருக்குத் தக்க காலம் வரும் போது உபதேசிக்கும் படி தன்சீடரான உய்யக்கொண்டாரிடம் சொல்லி வைத்தார் நாதமுனிகள்.




உய்யக்கொண்டாரும் (ஆளவந்தார் தக்க நேரத்தில் பிறக்காததால்தனதுசீடரான மணக்காலநம்பியிடம்அப்பொறுப்பைஒப்படைத்தார்

மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு உபதேசம் செய்து தன் பரமகுருவின்கட்டளையை நிறைவேற்றினார்.


இசையில் சிறந்தும் சோழமன்னனின் அன்புக்கும் பாத்திரமானவரான ஸ்ரீமந்நாதமுனிகளின் தலைமையில் கம்பர் ஸ்ரீராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் தாயார்சன்னதி எதிரிலுள்ள மண்டபத்தில் அரங்கேற்றினார்!

நாதமுனிகள் பணிவுடன் இப்படி அருள்கிறார்!


வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த,
மாறன் சடகோபன் வண்குருகூர்-ஏறுஎங்கள்
வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை
ஆள்வார் அவரே யரண்.