Thursday 26 May 2016


நாதமுனிகள் - ஆழ்வார்திருநகரி







நாதமுனிகள் கிபி 824 ம் வருடத்தில் கடலூர் மாவட்டத்தில் வீரநாராயணபுரம்என்னும் இன்றைய காட்டுமன்னார்கோயில் பகுதியில் சோபக்ருத ஆண்டு ;ஆனி மாதம்அனுச நட்சத்திரத்தில் திருவரங்கநாதன் என்னும் இயற்பெயருடன்பிறந்தவர்.
நாதமுனிகள் யோகவித்தைதேவ கான இசை ஆகியவற்றில் சிறந்துவிளங்கியதால் இவரை திருவரங்கநாதமுனிகள் என்று அழைத்தனர்அதுவேபிற்காலத்தில் மருவி நாதமுனிகள் ஆயிற்று..

காட்டு மன்னார் கோயில் எனும் தலத்தில் நாதமுனிகள் இருந்த போது வைணவஅடியார்கள் சிலர் கோயில்பெருமாளான மன்னனாரைச் சேவிக்க வந்தனர்.அப்போது அவர்கள் நம்மாழ்வாரின் ஆராஅமுதே அடியேன் உடலம் எனும்திருக்குடந்தை பாசுரத்தைப் பாடி சேவித்தனர்அதன் இறுதியில் குருகூர்ச்சடகோபன்குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும் என்றஅடிகளைக் கேட்ட நாதமுனிகள் அடியார்களிடம் ,”அந்த ஆயிரம் பாடல்கள்பற்றி சொல்ல இயலுமா?”என ஆர்வமாகக் கேட்டார்.
அவர்கள் அந்த பத்துப் பாசுரங்கள் மட்டுமே தமக்குத் தெரியும் என்றும் ஆயிரம்பாசுரங்களும் குருகூரில் மதுரகவிகள் வழி வந்த பராங்குச தாசரிடம் மற்றவிவரங்கள் தெரிய வரலாம் என்றும் கூறினர்
.நாதமுனிகளும் குருகூருக்குச் சென்று பராங்குச தாசரிடம் விசாரித்தார்.

 அவர் ”தற்சமயம் மதுரகவிகள் அருளிய ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ எனும்பத்துப் பாசுரங்கள் மட்டுமே உள்ளனமற்றைய ஆழ்வார் பாசுரங்கள் அழிந்துபோயின” என்று கூறினார்மேலும் கண்ணிநுண் சிறுத்தாம்பு பத்துப்பாசுரங்களை 12,000 முறை ஓதினால் நம்மாழ்வார் தோன்றி அருள்வார் என்றும்வழி கூறினார்.
நாதமுனிகள் திருப்புளியடியில் ஆழ்வார் சந்நிதியில் அமர்ந்து 12,000 முறைகண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாசுரங்களை ஓதினார்.அகம் மகிழ்ந்த நம்மாழ்வார்அவர் முன் தோன்றி தாம் பாடிய பாடல்களையும் ஆழ்வார் பிறர் பாடியபாடல்களையும் அவருக்கு அருளினார்நாலாயிரமும் நம்மாழ்வார் தந்ததுதான்!

பிரபந்தத்தின் பாடல்களுடன், அவற்றின் பொருளையும், அஷ்டாங்க யோக இரகசியங்களையும் அருளினார்.

கலியுகத்தில் ரிஷியாக இருந்த நாதமுனி,அவருக்கு மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகள் முன்பாக பரமபதம் அடைந்த நம்மாழ்வார் என்னும் பரம ரிஷியை வரவழைத்து உபதேசம் பெற்று நாலாயிரதிவ்யபிரபந்தம் என்னும் தமிழ்பொக்கிஷத்தை பெற்றுக்கொண்டாரெனில் நமது சித்தாந்தம் தான் எத்தனை உத்தமமானது பாருங்கள்! போட்டி பித்தலாட்டம் இல்லாத தூய்மையான சித்தாந்தம் கொண்டது அல்லவாநம் மதம்!

  

    ஆயிரம் பாடல்களைத் தேடிவந்த இவருக்கு மற்ற ஆழ்வார்கள் ‌அனைவரும்பாடிய பாடல்களும் கிடைத்ததுஇப்பாடல்களை திவ்யப்பிரபந்தமாக நாதமுனிகள் தொகுத்து முறைப்படுத்தி மேலையகத்தாழ்வார்,கீழையகத்தாழ்வார் என்ற இரு அக்காள் மகன்களை (மருமக்களை)திருவாய்மொழி திவ்யப் பிரபந்தப் பிரச்சாரத்தில் நாதமுனிகள் ஈடுபடுத்தினார்.இவர்களிருவரும் தேவகான இசைப்படி திவ்யப் பிரபந்தங்களை இறைவன் முன்பாடி அபிநயித்து மக்களிடம் அவற்றைப் பொருளுடன் பரப்பி வந்தனர்திருகுடந்தைதிவ்ய தேசத்திலிருந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் உலகிற்கு கிடைக்கும் வழியை நாதமுனிகள் பெற்றார்.


   பின்னர் ,மணவாள மாமுனிகள்நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின்திவ்யப் பிரபந்தத்தோடுஇராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிரதிவ்வியப் பிரபந்தம் என அருளினார்.


தான் பெற்ற புதையலை அனைவரும் அறியச் செய்தார்பிரபந்த பாடல்களைஇனிய இராகம்தாளம் அமைத்தும்அதற்கேற்ற அபிநயம் பிடித்தும் இறைவன்முன் ஆடினார்..


ஸ்வாமி தேசிகன் ஸ்ரீநாதமுனிகளை “தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசைதந்த வள்ளல்” என்று போற்றுகின்றார்ஸ்ரீநாதமுனிகள் இப்பிரபந்தங்களைப்பலவேறு திவ்யதேசங்களிலும் பூஜை காலங்களில் பாடுவது என்ற வழக்கத்தைஏற்படுத்தினார்.  வைணவத் திருத்தலங்களில் அரையர் சேவை எனப்படும்வழக்கத்திற்கு அடிகோலியவர் ஸ்ரீநாதமுனிகளே ஆவார்.

அரையர் சேவையை முதன்முதலில் தோற்றுவித்தவரும் இவரே! ஸ்ரீ வைணவ ஆச்சாரியப் பரம்பரையின் முதல் ஆச்சாரியரும் இவரே!



ஸ்ரீநாதமுனிகளின் பேரனும் குருபரம்பரையின் முக்கிய ஆசார்யனுமானஆளவந்தார்தமது ஸ்தோத்ர-ரத்னம் என்ற நூலின் தொடக்கத்தில் மூன்றுஸ்லோகங்களாலும் முடிவில் ஒரு ஸ்லோகத்தாலும் நாதமுனிகளைக்கொண்டாடுகின்றார்ஸ்வாமி தேசிகன்ஆளவந்தார் தமது ஸ்தோத்திரமானரத்னத்தை ஆசார்ய ஸ்துதி என்ற அழகிய பெட்டகத்தினுள் இட்டுள்ளார் என்றுவியக்கிறார்.  

ஆளவந்தார்,

நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே 
நாதாயமுநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே” 



என்று ஸ்ரீ நாதமுனிகளைக் கொண்டாடுகின்றார்


நாலாயிரம் பாசுரங்களை ராகத்துடனும் தாளத்துடனும் அபிநயத்துடனும் பாடியஇவர்களின் வழித்தோன்றல்களே “அரையர்கள்” என அழைக்கப்பட்டனர்.

என் பேரன் யமுனைத்துறைவன் (ஆளவந்தார்வருவான்அவனுக்கு யோகவித்தையை நீ உபதேசிக்க வேண்டும்” என்றும் உய்யக்கொண்டாரிடம் கூறீய நாதமுனிகள், அவரிடம் “ரகசியம் வெளியிடாதீர்” என்று கூறிஎன் அந்திமதசைக்குப் பிறகுபிறக்கப் போகும் என் பேரன் யமுனைத்துறைவனிடம்வேதாந்த சாரத்தையும்பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் ஒப்படைக்கவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

 ஆச்சாரி பரம்பரையில் நாதமுனிகளுக்குப் பின்னர் பெரும் புகழ்பெற்றவர்அவருடைய பேரனான யமுனைத்துறைவர்(யாமுனமுனிகள் என்ற ஆளவந்தார்தனக்கு நம்மாழ்வார் மூலமாகக் கிடைத்த உபதேசங்களைஎல்லாம் ஆளவந்தாருக்குத் தக்க காலம் வரும் போது உபதேசிக்கும் படி தன்சீடரான உய்யக்கொண்டாரிடம் சொல்லி வைத்தார் நாதமுனிகள்.




உய்யக்கொண்டாரும் (ஆளவந்தார் தக்க நேரத்தில் பிறக்காததால்தனதுசீடரான மணக்காலநம்பியிடம்அப்பொறுப்பைஒப்படைத்தார்

மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு உபதேசம் செய்து தன் பரமகுருவின்கட்டளையை நிறைவேற்றினார்.


இசையில் சிறந்தும் சோழமன்னனின் அன்புக்கும் பாத்திரமானவரான ஸ்ரீமந்நாதமுனிகளின் தலைமையில் கம்பர் ஸ்ரீராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் தாயார்சன்னதி எதிரிலுள்ள மண்டபத்தில் அரங்கேற்றினார்!

நாதமுனிகள் பணிவுடன் இப்படி அருள்கிறார்!


வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த,
மாறன் சடகோபன் வண்குருகூர்-ஏறுஎங்கள்
வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை
ஆள்வார் அவரே யரண்.